நாசா கடந்த வருடம் வெளியிட்ட அரிய படங்கள்! (பட இணைப்பு)


நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது.

தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன.

அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது.

இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது.

(T - 03)














இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்

பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது. பால்வெளி மண்டலத்தில் ஒரு பகுதி பிரபஞ்சம், ஒரு காலகட்டத்தில் சுருங்கத் தொடங்கி, பின் அழிந்து விடும் என்றும், எல்லை இல்லா பிரபஞ்சம் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது. பால்வெளி மண்டலத்தின் எல்லை கள் குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வடிவியல் முறை கணிதப்படி கணக்கிட்டு வருகின்றனர்.

ஆனால், அதன் எல்லைகள் குறித்த உண்மைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெருவெடிப்பு கொள்கையின் படி, பிரபஞ்சம் இயற்கையாகவே எல்லையில்லாமல் விரிவடைந்து செல்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "லட்சக்கணக்கானவர்கள் லாட்டரி சீட்டு வாங்கினாலும், அதில் ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைக்கிறது. அதுபோல, பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் பலர் அதிகளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்குத்தான் விண்வெளி குறித்த ரகசியங்கள் தெரிய வருகின்றன.

பால்வெளி மண்டலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள், மற்ற பிரபஞ்சங்களில் நின்று விட வாய்ப்புள்ளது' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபீல் பவுசோ. விரிவடையும் கொள்கையின்படி, பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானிகள் தவிர்த்து விடுகின்றனர்.

உதாரணமாக, நமது பிரபஞ்சம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. நமது பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் வாழும் சூழல் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. "நமது பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளை நாம் முன்னதாக பெற்றிருக்கவில்லை. எந்த கோட்பாட்டை நாம் விரும்பு கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல எண்ணங்களை பெற்றிருக்கிறோம். மற்ற பிரபஞ்சங்களிலும் இதேபோன்ற எண்ணங்கள் தோன்றுமா என்பது தெரியவில்லை' என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வான்இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் லைன்வேவர் கூறுகிறார். பல்வேறு சூத்திரங்கள் மூலம் கணக்கிட்டதில் நமது பிரபஞ்சம் தோன்றிய 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றும் இதன் இயக்கம் நின்று போக இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றும் ராபீல் பவுசோ மற்றும் அவரது குழுவினர் முடிவுக்கு வருகின்றனர்.

தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். இறுதியாக விண்மீன் படலமாக மாறி விடும். அந்த நேரத்தில் பூமியின் விதியும் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது. 

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

ஓசோன் படலம் 2048 இல் பழைய நிலைக்குத் திரும்பும் - ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகள் ( ஒப்பீட்டுப் படம் இணைப்பு)

ஓசோன் படலம் ஒன்றும் காணாமல் போய் விடவில்லை என்றும் இந்த நூற்றாண்டின் மத்திய பகுதியில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும் எனவும் கணித்துள்ளனர் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

ஓசோன் படலத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சிலவற்றால் உலகம் முழுதிலும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தோல் புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய வேலை.


கடந்த சில ஆண்டுகளாகவே அண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு குறைந்து காணப்படுவதும் அது குறித்த விழிப்புனர்ச்சிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது போன்று ஓசோன் குறைந்து காணப்படுவதையே ஓசோன் படலத்தில் ஓட்டை என பொதுவாக பலர் கூறுவது வழக்கம்.

துருவ பகுதிகளுக்கு வெளியே உள்ள ஓசோன் படலம் 2048 ஆம் ஆண்டில் 1980 இல் இருந்த பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்பது தற்போதைய ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் கணிப்பு.

அண்டார்டிகா போன்ற துருவ பகுதிகளில் ஓசோன் படலம் 2073 இல் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி இந்த ஆராய்ச்சி சமர்பிக்கப்பட்டுள்ளது.

1980 களில் அண்டார்டிகா பகுதிகளில் இருந்த ஓசோன் படலத்தையும் , தற்போது அதே பகுதியில் ஓசோன் குறைவினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஒப்பிடும் படியான படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் உள்ள அடர்ந்த ஊதா நிறம் ஓசோன் அளவு குறைந்துள்ளதை காட்டுகிறது.

scientist photo
































































































































page navigation